News March 25, 2025

ஐந்து வயது மேற்பட்ட குழந்தைகளின் விரல் பதிவு அவசியம்!

image

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அவர்களின் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் விரல் ரேகையை அருகில் இருக்கும் ரேஷன் கடைகளில் பதிவு செய்வது அவசியம் என்றும், இதனை இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்திருக்கிறார். தெரிந்தவர்கள் பயனடைய உடனே அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.. 

Similar News

News January 4, 2026

நாகை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நாகை மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 4, 2026

நாகை: 12th தகுதி.. ரயில்வே வேலை ரெடி!

image

நாகை மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு குறைந்தது 18 வயது நிரம்பிய, 12வது படித்தவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து, வரும் ஜன.29-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். இந்த நல்ல தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 4, 2026

கடன் உதவி: நாகை கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட உள்ளது. ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும், 18 – 60 வயதுக்குட்பட்ட நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!