News March 25, 2025

ஐந்து வயது மேற்பட்ட குழந்தைகளின் விரல் பதிவு அவசியம்!

image

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அவர்களின் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் விரல் ரேகையை அருகில் இருக்கும் ரேஷன் கடைகளில் பதிவு செய்வது அவசியம் என்றும், இதனை இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்திருக்கிறார். தெரிந்தவர்கள் பயனடைய உடனே அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.. 

Similar News

News November 13, 2025

நாகூர்: 100 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

image

நாகூரில் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்கா கந்தூரி விழா வருகிற 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 30-ம் தேதி சந்தனக்கூடு நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு நவ.21-ம் தேதி முதல் டிச.1-ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிதம்பரம், ராமநாதபுரம், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இருந்து 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 13, 2025

நாகை: அரசு பேருந்து மோதி டாக்டர் பலி

image

நாகை அருகே கீழ்வேளூர் கிழக்கு மடவிளாகம் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் திருமலை செல்வர். மருத்துவரான இவர் நேற்றிரவு திருவாரூரில் இருந்து கீழ்வேளுருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கீழ்வேளுர் அரசாணி குளம் அருகே எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில், திருமலை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 13, 2025

நாகை: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!