News October 24, 2024
ஏழைகள் சாமி கும்பிட கூடாதா என உயர் நீதிமன்றம் கேள்வி

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி கட்டணம் வசூலிப்பதற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கோயிலில் சாமி தரிசனத்துக்கு ரூ.1,000, 2,000 வாங்கினால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்?.ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
Similar News
News November 27, 2025
தூத்துக்குடி: SIR லிஸ்ட் ரெடி.. உடனே CHECK பண்ணுங்க!

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.<
2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க.
ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்க்கு தொடர்பு கொள்ளுங்க.
இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News November 27, 2025
தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 4 பேருக்கு சிறை

கடந்த 2015-ம் ஆண்டு குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நாசரேத்தைச் சேர்ந்த தினேஷ், இசக்கிமுத்து, ஸ்டாலின், ஹைகோர்ட் துரை ஆகிய 4 பேரை குலசேகரப்பட்டினம் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று 4 பேருக்கும் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
தூத்துக்குடி: தேர்வு இப்போ இல்லை.. கலெக்டர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவை., திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம், கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய 9 வட்டங்களில் கிராம உதவியாளர் பணி நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு டிச.17-லும், ஜன.2 முதல் நேர்முக தேர்வும் நடைபெற இருந்த நிலையில், இத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இலம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE


