News February 6, 2025
ஏலகிரியில் மூதாட்டி கொலை வழக்கில் 2 தனிப்படை

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை முத்தானூர் பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி காந்தா என்பவரை நேற்று மர்ம நபர்கள் கொலை செய்தனர். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாததால், மாவட்ட எஸ்.பி.ஷ்ரேயா குப்தா, குற்றவாளிகள் கண்டுபிடிக்க ஏலகிரி மலை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் 2 தனிப்படையினரை அமைத்து உத்தவிட்டுள்ளார்.
Similar News
News April 21, 2025
திருப்பத்தூரில் வாட்டி வதைக்கும் வெயில்

திருப்பத்தூரில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்கக்க வேண்டும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துனர் பணி: இன்றே கடைசி நாள்

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த <
News April 21, 2025
ஆம்பூர் அருகே மதுபானம் விற்பனை செய்தவர் கைது

திருப்பத்தூர், ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் நேற்று (ஏப்ரல் 20) உமராபாத் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியவரிகம் பகுதியில் வீட்டிற்குள் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்த கோபி என்பவரை உமராபாத் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.