News August 16, 2024
ஏரியூர் அருகே மனைவியை கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவர்

ஏரியூர் அருகே உள்ள ஒட்டன் ஊரை சேர்ந்தவர் கோவிந்தன் இவரும் இவரது மனைவி சின்னப்பொண்ணு ஆகிய இருவரும் ஆடுகளை மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். ஆடு விற்பனையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், நேற்று கோவிந்தன் மனைவி சின்னப்பொண்ணை கல்லால் தாக்கி கொலை செய்து, பின் அவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஏரியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
Similar News
News October 17, 2025
தருமபுரி: 2,708 உதவிப் பேராசிரியர் வேலை.. APPLY NOW

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக மாதம் ரூ.57,700 – ரூ.1,82,400 வரை வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கல்வி தகுதிகள் குறித்து அறிய <
News October 17, 2025
விளம்பர பதாகைகளை வெளியிட்ட ஆட்சியர் சதீஸ்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்தில் பாலின விகிதாச்சாரம் குறித்து அனைத்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடனான விழிப்புணர்வு நடைபெற்றது. இதில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரிந்துக்கொள்ளும் வழிமுறைகள் என்று இணையவழியாக பொய்யாக பரப்பப்படுகின்றது. இந்த செய்தியை கண்டிக்கும் வகையில் விளம்பர பதாகைகளை ஆட்சியர் சதீஷ் வெளியிட்டுள்ளார்.
News October 17, 2025
ஆட்சியர் சதீஸ் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்தில் பாலின விகிதாச்சாரம் குறித்து அனைத்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சதீஸ், தலைமையில் நேற்று அக்.16 நடைபெற்றது. உடன் இணை இயக்குநர் (நலப்பணிகள்)சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், துணை இயக்குநர் (குடும்பநலம்) பாரதி, மற்றும் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.