News August 16, 2024

ஏரியூர் அருகே மனைவியை கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவர்

image

ஏரியூர் அருகே உள்ள ஒட்டன் ஊரை சேர்ந்தவர் கோவிந்தன் இவரும் இவரது மனைவி சின்னப்பொண்ணு ஆகிய இருவரும் ஆடுகளை மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். ஆடு விற்பனையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், நேற்று கோவிந்தன் மனைவி சின்னப்பொண்ணை கல்லால் தாக்கி கொலை செய்து, பின் அவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஏரியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

Similar News

News November 24, 2025

தருமபுரி மாவட்ட பெண்கள் கவனத்திற்கு!

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தருமபுரியில் இலவச அழகு கலை பயிற்சி,செவிலியர் உதவியாளர் மற்றும் மருந்தக உதவியாளர் ஆகிய பயிற்சிகள் பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே 18 – 40 வயது கொண்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்த இருவரும் இப்ப பயிற்சியில் சேர்ந்து பயனடைய அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு 04342232288 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News November 24, 2025

தர்மபுரி: பெண் தீக்குளித்து தற்கொலை!

image

தர்மபுரி: பென்னாகரம், லாடக்கார தெருவைச் சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மனைவி பவுஜியா(26). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், அப்பாஸுக்கு குடி பழக்கம் இருந்ததா, இதனை வெகு நாட்களாக பவுஜியா கண்டித்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று தான் தீக்குளிக்கப் போவதாக மிரட்டியுள்ளார் பவுஜியா. அப்போது எதிர்பாராதவிதமாக தீ பற்றியதில், பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 24, 2025

தருமபுரி: காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இன்று (நவ-23) இரவு 9 மணி முதல் நாளை காலை 6மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!