News April 15, 2025

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழப்பு

image

பாசார் கிராமத்தில் உள்ள சித்தேரி ஏரியில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சிறுமிகள் குளிப்பதற்காக சென்றனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஏரியில் குளித்துக் கொண்டிருந்த சிவசக்தி(11), ஸ்வேதா(12) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது சம்பவம் தொடர்பாக ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறையில் குழந்தைகளை கண்காணியுங்கள் பெற்றோர்களே. 

Similar News

News April 28, 2025

கள்ளக்குறிச்சிக்கு மழை வாய்ப்பு

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே போல தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்றும் நாளையும் கள்ளக்குறிச்சி உட்பட 16 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 28, 2025

கள்ளக்குறிச்சி எந்த பதவியில் யார்?

image

▶️ கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்- பிரசாந்த் (04151-228802)

▶️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- ரஜத் R சதுா்வேதி (04151-221313)

▶️ மாவட்ட வருவாய் அலுவலர்- ஜீவா (04151-228800)

முக்கிய அதிகாரிகளின் எண்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்

News April 28, 2025

கள்ளக்குறிச்சி மாணவர்களுக்கு நற்செய்தி

image

மாவட்டத்தில் கிராமப்புற தொழில் முனைவோர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான, தொகுதி திட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.பிளஸ் 2 வகுப்பு வரை கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், 15 நாட்கள் கிராமங்களில் தங்கும் ஆர்வம் இருக்க வேண்டும். மாதத்திற்கு ரூ.40 ஆயிரம் தொகுப்பூதியம் மற்றும் 30 சதவீத பயணப்படி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

error: Content is protected !!