News April 21, 2025
ஏரியில் குளிக்கச் சென்றன் மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

திருப்பத்தூரை சேர்ந்த ஆர்யா (12) என்ற மாணவர் பெங்களூருவில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நண்பர்களுடன் பெரியவெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த ஆர்யா, திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News December 26, 2025
இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள்

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை தினந்தோறும் இரவு ரோந்து பணி அதிகாரிகள் நியமிக்கிறது. இன்று (26.12.2025) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பாதுகாப்பில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
News December 26, 2025
திருப்பத்தூர் பெயர் காரணம் தெரியுமா?- சுவாரசியம்!

சந்தன மாநகர் என்றும் அழைக்கப்படும் திருப்பத்தூர் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் திரு+பத்து+ஊர் = “திருப்பத்தூர்” என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் திருவனபுரம் என்ற பெயரை “திருப்பத்தூர்” என்று மாற்றியதாக கூறப்படுகிறது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள்.
News December 26, 2025
திருப்பத்தூர்: உங்கள் வீட்டிற்கு பட்டா இல்லையா?- CLICK HERE

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


