News April 10, 2025
ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்: கலெக்டர் தகவல்

தமிழக கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலம், மீன்வளத்தை பாதுகாக்க ஏப்.15 முதல் ஜூன்.14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள், இழுவைப் படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி ராமநாதபுரம் விசைப்படகுகள், இழுவைப் படகு மீனவர்கள் ஏப்.15- ஜூன் 14 வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
ராமநாதபுரம் மக்களே உங்க பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா..

ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் செப்.,19 ல் (வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் பங்கேற்று கோரிக்கைகள், குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News September 16, 2025
ராமநாதபுரம்: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

ரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க <
News September 16, 2025
ராமநாதபுரம்: கடையில் ரூ.25 ஆயிரம் அபராதம்

உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமையில் ராமநாதபுரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், ராமேஸ்வரம் மண்டபம் உணவு பாதுகாப்பு அலுவலர் முருகன் ஆகியோர் இன்று காலை போகலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சத்திரக்குடியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து ரூ25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.