News February 9, 2026
ஏப்.13-ல் தமிழகத்திற்கு தேர்தல்?.. வந்தாச்சு அப்டேட்

தமிழக சட்டமன்ற தேர்தலை ஏப்.13-ம் தேதி நடத்த ECI திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்.2-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து, 10 நாள்களுக்கு பிறகு வாக்குப்பதிவை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ECI துணை ஆணையர் <<19077197>>பானு பிரகாஷ் எத்துரு <<>>நாளை மறுநாள்(பிப்.11) தமிழகம் வருகிறார். அவரது ஆய்வுக்கு பிறகு தேர்தல் தேதியை இறுதி செய்து அறிவிப்பு வெளியாகும்.
Similar News
News March 12, 2026
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 17,342 பேர் எழுதினர்

இராமநாதபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 85 மையங்களில் 17,342 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மாவட்டத்தில் 10-ஆம் பொதுத்தேர்வை 261 தேர்வு மையங்களில் 8,183 மாணவர்கள், 8,588 மாணவிகள், தனித்தேர்வர்களாக 571 பேர் என மொத்தம் 17,342 பேர் தேர்வு எழுதினர். 85 தேர்வு மையங்களில் 105 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
News March 12, 2026
இது இருந்திருந்தால் மாணவிக்கு வன்கொடுமை நடந்திருக்காதா?

வீட்டில் கழிப்பறை இல்லாததால் வெளியே சிறுநீர் கழிக்க சென்ற <<19356260>>மாணவி வன்கொடுமைக்கு<<>> ஆளாகியுள்ளார். தூய்மை இந்தியா இயக்கம் மூலம், கிராம & நகர்ப்புற வீடுகளில் கழிப்பறை கட்டித்தரும் திட்டம் 2014-லேயே வந்துவிட்டது. இந்நிலையில், 12 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் கிராமங்களில் சில வீடுகளில் கழிப்பறை இல்லையா எனவும், அது இருந்திருந்தால் மாணவிக்கு இக்கொடுமை நடந்திருக்காது என்றும் பலர் கூறுகின்றனர். உங்கள் கருத்து?
News March 12, 2026
பாலியல் குற்றவாளிகளை திமுக காக்கிறதா? EPS

தூத்துக்குடியில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக EPS கூறியுள்ளார். சிறுமியை காணவில்லை என புகாரளித்தும் போலீஸ் மெத்தனப் போக்குடன் செயல்பட்டதாக கூறிய அவர், குற்றவாளிகளை உடனே கண்டறிந்தால் உறவினர்கள் போராட்டத்தை முடித்துவிடப் போகின்றனர் என்றார். மேலும், உறவினர்களுடன் திமுக MLA ஏன் சமாதானம் பேசவேண்டும் எனவும் குற்றவாளிகளை காக்க திமுக முயல்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


