News April 2, 2025
எஸ்.பி பதவி ஏற்றதில் இருந்து 106 பதிவேடு குற்றவாளிகள் கைது

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ ராகரத்தினம் பதவியேற்றது முதல் 106 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். மேலும் 15 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்சி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பேணிகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 28, 2025
திருச்சி: வெளுத்து வாங்க போகும் மழை..

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது தமிழகத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருச்சி மாவட்டத்தில் இன்று கனமழையும், நாளை (நவ.29) சூறைக்காற்றுடன் கூடிய மிக கனமழையும் கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 28, 2025
திருச்சி: தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில், முதுநிலை திட்ட உதவியாளர் பதவிக்கான காலியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களுடன் வரும் 12.12.2025 க்குள் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
திருச்சி: இலவச ஓட்டுநர் பயிற்சி – கலெக்டர்

திருச்சியில் கிராமப்புற இளைஞர்களுக்கான “உதவி உழுவை ஓட்டுநர்” இலவச வேலை வாய்ப்பு பயிற்சி, வரும் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள கல்வி தகுதி தேவையில்லை. பயிற்சி நிறைவு செய்த பின் உழுவை இயந்திரத்திற்கான ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தரப்படும். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் வெற்றி நிச்சயம் என்ற செயலியில் பதிவு செய்து பயன் பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


