News April 24, 2025
எஸ்.ஐ. வேலைக்கு இலவச பயிற்சி

1,299 சார்பு ஆய்வாளர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இத்தேர்வுக்கான இலவச பயிற்சி நாளை மறுநாள் (ஏப்ரல் 26) முதல் தொடங்க உள்ளது. பயிற்சி வகுப்பு சனி, ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 – மாலை 4:00 மணி வரை நடைபெறும். இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளோர், 96264 56509, 63815 52624 என்ற மொபைல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 21, 2025
திருவள்ளூர் மக்களே… ஞாயிறு ரயில் அட்டவணையே மாறுது!

திருநின்றவூர் ரயில்வே பணிமனையில் நாளை மறுநாள் நவ 23 அன்று காலை 7:00 மணி முதல் மாலை 3:40 மணி வரை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் (EMU) ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே பயணிகள் இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
News November 21, 2025
அம்பத்தூர்: தற்கொலை வழக்கில் மருத்துவர் கைது

அம்பத்தூரைச் சேர்ந்த மருத்துவர் அசாருதீன், பெண் மருத்துவரான சமீரா என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமீரா தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையால் தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக சமீராவின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து ஆர்.டி.ஓ விசாரணையில் இது உறுதியான நிலையில், தலைமறைவாக இருந்த அசாருதீனை நேற்று கைது செய்தனர்.
News November 21, 2025
திருவள்ளூர்: 206 கிலோ குட்கா பறிமுதல்

திருவள்ளூர்: மாதவரம் ரவுண்டானா அருகே இன்று(நவ.21) அதிகாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் காரில் இருந்த இருவர் தப்பி ஓடினர். இதனையடுத்து காரில் சென்று சோதனை நடத்திய போது மூட்டை மூட்டையாக 206 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


