News April 24, 2025

எஸ்.எஸ்.கோட்டையில் ஆசிரியருக்கு ரூ.2 இலட்சம் அபராதம்

image

எஸ்.எஸ் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்த 7ம் வகுப்பு மாணவியை 400 முறை தோப்புக் கரணம் போடச் செய்த அரசுப்பள்ளி ஆசிரியை சித்ராவுக்கு ரூ.2 இலட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் தாயார் தொடர்ந்த வழக்கில், அபராத தொகையை ஆசிரியை சித்ராவிடம் இருந்து வசூலிக்கவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 7, 2026

சிவகங்கை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
சிவகங்கை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689
தமிழ்நாடு அவசர உதவி: 04575-242561
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 7, 2026

சிவகங்கை: அரசு வழங்கும் ரூ.15 லட்சம் தனிநபர் கடன் APPLY…

image

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பாக தனிநபர் கடன் ரூ.15 லட்சம் வரை பெறலாம். பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 18 – 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டம் மூலம் கடன் பெறலாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம். மேலும் தகவல்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவகத்தை அனுகவும். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 7, 2026

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளுக்கு அறிவிப்பு

image

சிவகங்கை: திண்டுக்கல் கோட்ட பிரிவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ரயில் எண்: 16322 கோயமுத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று (பிப்.7) முதல் 8, 10,14, ஆகிய தேதிகளில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும். சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!