News April 24, 2025
எஸ்.எஸ்.கோட்டையில் ஆசிரியருக்கு ரூ.2 இலட்சம் அபராதம்

எஸ்.எஸ் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்த 7ம் வகுப்பு மாணவியை 400 முறை தோப்புக் கரணம் போடச் செய்த அரசுப்பள்ளி ஆசிரியை சித்ராவுக்கு ரூ.2 இலட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் தாயார் தொடர்ந்த வழக்கில், அபராத தொகையை ஆசிரியை சித்ராவிடம் இருந்து வசூலிக்கவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
சிவகங்கை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

சிவகங்கை மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04575-240222) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க
News December 13, 2025
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் புதிய திருப்பம்

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் கூடுதலாக மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஸ், எஸ்ஐ சிவக்குமார், காவலர் இளையராஜா ஆகிய 4 போரையும் எதிரிகளாக சேர்த்து குற்றப்பத்திரிகையை ஏற்கவேண்டும் என்று சிபிஐ தரப்பு நேற்று நீதிமன்றத்தில் கேட்டு கொண்டது. இதனை விசாரித்த நீதிபதி எம்.உதயவேலன் வழக்கு விசாரணையை டிச.19-க்கு ஒத்தி வைத்தார்.
News December 13, 2025
சிவகங்கை: 10th தகுதி.. ரூ.56,900 சம்பளத்தில் வேலை ரெடி

சிவகங்கை மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் <


