News April 24, 2025

எஸ்.எஸ்.கோட்டையில் ஆசிரியருக்கு ரூ.2 இலட்சம் அபராதம்

image

எஸ்.எஸ் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்த 7ம் வகுப்பு மாணவியை 400 முறை தோப்புக் கரணம் போடச் செய்த அரசுப்பள்ளி ஆசிரியை சித்ராவுக்கு ரூ.2 இலட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் தாயார் தொடர்ந்த வழக்கில், அபராத தொகையை ஆசிரியை சித்ராவிடம் இருந்து வசூலிக்கவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 12, 2025

சிவகங்கை: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

image

சிவகங்கை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <>இங்கே க்ளிக் <<>>செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

News December 12, 2025

சிவகங்கை: இணை இயக்குநர் அலுவலகத்தில் வேலை ரெடி!

image

தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலமாக சிவகங்கை மாவட்ட இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் காலியாக உள்ள செவித்திறன் ஆய்வாளர், அறுவை அரங்கு உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம், பழைய அரசு தலைமை மருத்துவமனையில் டிச.30க்குள் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News December 12, 2025

சிவகங்கை சித்த மருத்துவ பிரிவில் வேலை ரெடி! கலெக்டர் அறிவிப்பு

image

தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலமாக சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் 15.12.2025 முதல் 29.12.2025 வரை வரவேற்கப்படுகிறது. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. விண்ணப்பிக்க விரும்புவோர் <>http:/sivaganga.nic.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என‌ மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!