News May 15, 2024
எஸ்.எம் எஸ் மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வரக்கூடிய நிலையில், இன்று தேனி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டு தேனி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
Similar News
News November 27, 2025
தேனி: ஒரு மாத குழந்தை உயிரிழப்பு.!

கூடலூரை சேர்ந்தவர் அபிசதா. இவருக்கு 2.1/2 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் 42 நாட்களுக்கு முன்பு 2வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (நவ.25) 2வது குழந்தையை தரையில் படுக்க வைத்து விட்டு தாய் வேலை செய்த நிலையில், விளையாடிக் கொண்டிருந்த முதல் குழந்தை 2வது குழந்தையின் மீது தவறி விழுந்தது. இதில் படுகாயமடைந்த அந்த குழந்தை உயிரிழந்தது. இது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 27, 2025
தேனி: இளைஞர் திடீரென தற்கொலை

பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (30). இவரது தாயார் வீரம்மாள் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த போது கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது ரவீந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பெரியகுளம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
News November 27, 2025
பசுமை முதன்மையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு சிறந்த பங்களிப்பை செய்த பசுமை முதன்மையாளருக்கு விருது வழங்கி தலா ரூ.1,00,000 பரிசு தொகையும் வழங்கப்பட உள்ளது. (https://theni.nic.in), (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.


