News May 15, 2024
எஸ்.எம் எஸ் மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வரக்கூடிய நிலையில், இன்று தேனி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டு தேனி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
Similar News
News November 28, 2025
தேனி உதவி இயக்குநர்கள் பணி மாறுதல்

தேனி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (சத்துணவு) இருந்த எஸ்.அண்ணாதுரை தேனி மாவட்ட உதவி இயக்குநர் (தணிக்கை) பணிக்கும் அந்தப் பணியில் இருந்த சி.கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (சத்துணவு) பணிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மு.முருகையா மாற்றப்பட்டு, மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜ.உம்முள் ஜாமியா நியமிக்கப்பட்டுள்ளார்.
News November 27, 2025
போடி: ஆதரவற்ற குழந்தைகளுக்கு சீருடை வழங்கிய எம்பி

போடி ஒன்றியம் கோடாங்கிபட்டியில் ஆதரவற்ற இல்லத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச சீருடைகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று வழங்கினார். அருகில் ஒன்றிய செயலாளர் ஐயப்பன். அயலக அணி செயலாளர் ராஜன், முஜிப் ரஹ்மான் மற்றும் திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஆதரவற்ற குழந்தைகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News November 27, 2025
13-18 வயதுள்ள குழந்தைகளுக்கு விருதுடன் ரூ.1 லட்சம்

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்கள் முன்னேற்றத்திற்கு உழைக்கும் 13 வயது முதல் 18 வரையிலான குழந்தைகளுக்கு ரூ.1 இலட்சம் பரிசுத்தொகையும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இணையத்தள முகவரியில்
(https://awards.tn.gov.in) 29.11.2025 க்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.


