News February 17, 2025

எஸ்பி தலைமையில் பாதுகாப்பு முன்னேற்பாடு கூட்டம்

image

தமிழக முதல்வர் அரசு விழா பாதுகாப்பு முன்னேற்பாடு கலந்தாய்வு கூட்டம் கடலூர் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐ.பி.எஸ், முதலமைச்சரின் பாதுகாப்பு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கோடீஸ்வரன், நல்லதுரை மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள் இருந்தனர்.

Similar News

News January 3, 2026

கடலூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News January 3, 2026

கடலூர்: 9-ம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி சாவு

image

குறவன்குப்பத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் மகன் கிருபாகரன் (14). பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், விடுமுறை காரணமாக நேற்று மாலை கீழ்பாதி ஏரிக்குச் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாமல் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால், மாணவன் தண்ணீரில் மூழ்கி மாயமானான். இதையடுத்து நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.

News January 3, 2026

கடலூர்: சிறுமியை தாயாக்கிய வாலிபர் கைது

image

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம் (24). சிதம்பரத்தில் டிரைவராக வேலை செய்து வந்த இவர், 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி கர்பமாக்கியுளார். இதையடுத்து சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், அவரது தாய் அளித்த புகாரின் பேரில் இப்ராகிமை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இப்ராகிமின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் வகையில், அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!