News August 14, 2024
எஸ்எம்எஸ் பார்த்து ஏமாறாதீர்கள் – அலர்ட்

திருச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கற்பகசெல்வி கூறுகையில், மின் நுகர்வோரின் கைப்பேசி எண்ணுக்கு மின் கட்டண பாக்கி தொடர்பாக அனுப்பப்படும் குறுஞ் செய்திக்கு கீழ் TANGEDCO வங்கி கணக்கு எண் மட்டுமே அனுப்பப்படும். தனிநபரின் வங்கி கணக்கு எண்ணோ அல்லது செல்போன் நம்பரோ அனுப்புவது நடைமுறையில் இல்லை. இதுபோன்ற போலியான எஸ்.எம்.எஸ்.தகவல்களை பார்த்து நுகர்வோர்கள் பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
திருச்சி: அரசு பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி விபத்து

திருச்சியில் இருந்து ஓசூர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து நேற்று (நவ.07) பெருகமணி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த கார் மீது கட்டுபாட்டை இழந்து நேருக்குநேர் மோதியது. இதில், காரின் முன்பக்கம் முழுவதுமாக உருக்குலைந்ததுடன், காரில் பயணம் செய்த இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 7, 2025
திருச்சி: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கை முடக்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT
News November 7, 2025
திருச்சி : திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், ரூ.25,000!

1. திருச்சி மாவட்ட மக்களே, ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000 பணம் & 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
2. இதற்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அணுக வேண்டும்.
3. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
4. திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
5. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!


