News February 17, 2025
எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்
Similar News
News December 24, 2025
கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் (Assistant) பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளன. இந்தநிலையில் கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி உதவியாளர் பணித் தேர்வுக்குத் தயாராகுபவர்களுக்கு, இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக 6383050010 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News December 24, 2025
கரூர் மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி சிறப்பு முகாம்

கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை, மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கமும் இணைந்து 29.12.2025 முதல் 18.01.2026 முடிய 21 நாட்களுக்கு அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு, இலவசமாக தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பு சிகிச்சை 8 வது சுற்றுப் பணி அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டத்தின் கீழ், கால்நடை நிலையங்களில் நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News December 23, 2025
கரூர் அருகே அதிரடி கைது; போலீசார் நடவடிக்கை

கரூர் மாவட்டம், நங்கவரம் அருகே நச்சலூர் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரை கடத்திச் சென்றதாக பெண்ணின் தாயார் புகார் கொடுத்திருந்தார். மேலும் நங்கவரம் போலீசார் சிசிடிவி மூலமாக தேடிய நிலையில், நேற்று இரவு கடத்தி சென்ற ரஞ்சித் என்பவரை அதிரடியாக மடக்கிப்பிடித்து நங்கவரம் போலீசார் கைது செய்து பெண்ணை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.


