News February 17, 2025
எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்
Similar News
News December 12, 2025
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வசிக்கும் சொந்த வீடில்லா ஏழை குடியிருப்புவாசிகள் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இடம் பெற https://tnuhdb.tn.gov.in/webhome/dept_beneficiary_form.php என்ற இணையதளத்தில் நேரிலோ, இ-சேவை மையத்தின் மூலமாகவோ உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்குமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
News December 12, 2025
கரூரில் சோகம்; ரயிலில் அடிபட்டு பெண் பலி

கரூர் மாவட்டம் வெங்கமேடு VPG நகர் ரயில்வே பாதையில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெயர், விலாசம் தெரியாத பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு ரயிலில் அடிபட்டு உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து கரூர் ரயில்வே காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
News December 12, 2025
கரூர்: ஆற்று மணல் மூட்டைகளை கடத்தி வந்த நபர் கைது!

கிருஷ்ணராயபுரம் தாலுக்கா லாலாபேட்டை ஆண்டியப்பன் நகர் அருகே லாலாபேட்டை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அரசு அனுமதி இன்றி மினி வேனில் ஆற்று மணலை மூட்டைகளாக கடத்தி வந்தது தெரியவந்தது. பிறகு மணல் கடத்தலில் ஈடுபட்ட மேட்டு திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் மகன் பாலகுமார் (26) என்ற கொத்தனார் தொழிலாளி மீது லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.


