News April 27, 2025
எர்ணாகுளம்- ஹாட்டியா ரயிலில் கூடுதலாக 2 ஏசி பெட்டி இணைப்பு!

கோவை, ஈரோடு, சேலம் வழியே இயக்கப்படும் எர்ணாகுளம்- ஹாட்டியா
எக்ஸ்பிரஸ் ரயில்கள் (22837/22838) வரும் ஏப்ரல் 28- ஆம் தேதி முதல் கூடுதலாக எக்னாமி ஏசி பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இனிமேல் இந்த ரயில் 19 மூன்றடுக்கு எக்னாமி ஏசி பெட்டிகள், 1 பேன்ட்ரி கார், 2 லக்கேஜ் மற்றும் பிரேக் வேன் பெட்டிகள் என 22 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 21, 2025
சங்ககிரி: தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி!

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்து மாவட்டம் தும்மபட்டாவை சேர்ந்தவர் புருவன். இவர் குடும்பத்துடன், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வரதம்பட்டியில் வசித்து, அதே பகுதியில் விசைத்தறி தொழில் செய்கிறார். அவரது, 2வது குழந்தை சித்தார்த், நேற்று விளையாடிக்கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 21, 2025
சங்ககிரி: தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி!

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்து மாவட்டம் தும்மபட்டாவை சேர்ந்தவர் புருவன். இவர் குடும்பத்துடன், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வரதம்பட்டியில் வசித்து, அதே பகுதியில் விசைத்தறி தொழில் செய்கிறார். அவரது, 2வது குழந்தை சித்தார்த், நேற்று விளையாடிக்கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 21, 2025
சேலம்: விஜய் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு!

சேலத்தில் அடுத்த மாதம் 4-ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்கு அனுமதி கோரி அக்கட்சி சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், சேலத்தில் டிச.4-ம் தேதி விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. கார்த்திகை தீப பணிகள் இருப்பதால் பாதுகாப்பு கொடுக்க இயலாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


