News January 2, 2025
எரவாஞ்சேரி: விஷப் பூச்சி கடித்து சிறுமி உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், சிமிழி பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவரது மகள் கவிஸ்ரீ (13). பள்ளி விடுமுறை காரணமாக எரவாஞ்சேரியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு கவிஸ்ரீ சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது, விஷப் பூச்சி கடித்ததில் மயங்கிய சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எரவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
திருவாரூர்: டிகிரி போதும்.. அரசு வேலை

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 134
3. வயது: 30 (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: டிகிரி
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News November 26, 2025
JUST IN திருவாரூர்: மிக கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.28 & நவ.29 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 26, 2025
திருவாரூர்: புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை திறப்பு விழா

நீடாமங்கலம் அருகில் உள்ள பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நேற்று மாலை (நவ. 25) நடைபெற்றது. காமதேனு சாரீட்டீஸ் மூலம் வகுப்பறையில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு வர்ணப் பூச்சு அடிக்கப்பட்டு புதுப்பிக்க பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் தலைமை வகித்தார்


