News April 24, 2025

எம்.எம்.யு ஊர்தி ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையிலான எம்.எம்.யு ஊர்தி ஓட்டுநர் காலிப் பணியிடத்திற்கு உரிய ஆவண நகல்களுடன் வரும் 08.05.2025ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு 04575-240524 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். Share It.

Similar News

News November 23, 2025

சிவகங்கை: புதிய வாக்காளரா நீங்க.? இங்க பதிவு பண்ணுங்க!

image

சிவகங்கை மாவட்டத்தில் 01.01.2026 ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியாக உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலோ அல்லது<> voters.eci.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாகவோ படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம் என – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News November 23, 2025

சிவகங்கை: பெண்ணின் வீட்டில் புது மாப்பிள்ளை தற்கொலை

image

சிவகங்கை அருகே கோமாளிப்பட்டியைச் சேர்ந்தவர் நவீன் (27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதன் பின்பு நவின் அப்பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் நவீன் பெண்ணின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நவீன் தாயார் வசந்தி புகாரளித்ததன் பேரில் நகர் போலீசார் விசாரனை நடத்தினர்.

News November 23, 2025

சிவகங்கை: 5 பேரை விரட்டிக் கடித்த வெறிநாய்..!

image

இளையான்குடியில் சந்தைக்கு சென்ற  இளையான்குடியைச் சேர்ந்த முகமதுசேக் (38), ஜாகிராபானு (47), சேக்தாவூது (48), முகமதுரபீக் (12), ஊர்வலசையைச் சேர்ந்த சிங்கபாண்டி (29) ஆகிய 5 பேரை வெறிநாய் விரட்டி கடித்தது. காயமடைந்த அனைவரும் இளையான்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெறிநாய் கடித்ததால் மக்கள் சாலைகளில் நடமாடவே அச்சப்படுகின்றனர்.

error: Content is protected !!