News January 2, 2025
என் எஸ் கிருஷ்ணன் வீட்டை பார்வையிட்ட வைரமுத்து

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சமீபத்தில் வருகை தந்த கவிஞர் வைரமுத்து கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் வீட்டை சென்று பார்வையிட்டு அது சிதலமடைந்து இருப்பதை கண்டு அவரது முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.1941இல் கட்டப்பட்ட ‘மதுரபவனம்’ மாளிகை ஓர் உயரமான நோயாளியாக உருமாறிக் கிடந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டை சீரமைக்க கோரிக்கைகள் எழுந்து வருகின்றது.
Similar News
News September 19, 2025
குமரி: மக்களே இந்த அதிசய காட்சியை காணத்தவறாதீர்கள்

திருவட்டாறில் 108 வைணவத்தலங்களில் ஒன்றான ஆதிகேசவப்பெருமாள் ஆலயம் உள்ளது. பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் 3, 4, 5 தேதிகளில் சூரியன் மேற்குப்பகுதியில் மறையும் போது சூரியனின் செங்கதிர்கள் கோவில் கருவறையில் பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் ஆதிகேசவப்பெருமாளின் திருமேனியில் விழும் வகையில் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த அதிசய ஒளியை செப்.19, 20, 21 தேதி மாலையில் தரிசிக்கலாம்.
News September 19, 2025
குமரி: EXAM இல்லாத அரசு துறை வேலை! APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 160 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. B.E படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது 4 வருட ஒப்பந்த வேலையாகும். மாத சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு கிடையாது. அக். 22க்குள் <
News September 19, 2025
நாகர்கோவில்: மருமகளின் காதை கடித்த மாமியார்

நாகர்கோவில்: சாய்கோடு பகுதியைச் சேர்ந்த தமபதியினர் பிரின்ஸ் – மஞ்சு. மஞ்சு தனது கணவரின் குடிப்பழக்கைத்தை பற்றி பேசினால் மகனை தவறாக பேசாதே என்று மருமகளிடம் அல்போன்சா சண்டை போடுவாராம். நேற்று முன்தினம் மாலை பிரின்ஸ் மற்றும் மஞ்சு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மஞ்சுவுடன் அல்போன்சா தகராறில் ஈடுபட்டதோடு கல்லால் அவரது முகத்தில் அடித்து காதை கடித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு.