News September 28, 2024
என்கவுண்டர் விவகாரத்தில் அதிரடி உத்தரவு

மதுரையில் கடந்த 2010 இல் முருகன் (எ) கல்லு மண்டையனை என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கை விசாரிக்க, ஏடிஎஸ்பி-யை விடகூடுதல் தகுதி கொண்ட சிபிசிஐடி அதிகாரியை நியமித்து 6 மாதத்திற்குள் விசாரணை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. என்கவுண்டரில் கொல்லப்பட்ட முருகனின் தாய் குருவம்மாள் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
மதுரை: சிறுமி கர்ப்பம்; இளைஞர் மீது போக்சோ

திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் செந்தில் மகன் திருப்பதி(26). இவர் 17 வயது சிறுமியை கோவில் ஒன்றில் வைத்து பெற்றோருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதில் சிறுமி இரண்டரை மாத கர்ப்பமானார். மகளிர் ஊர்நல அலுவலர் பத்மா இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் திருப்பதியை இன்று கைது செய்தனர்.
News November 21, 2025
மதுரை: 5,810 காலியிடங்கள்.. மீண்டும் ஒரு வாய்ப்பு! APPLY

மதுரை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கு நவ.20 கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News November 21, 2025
மதுரையில் காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்தவர் கோட்டைச்சாமி மகன் லட்சுமணன்(30). இவர் சிற்பகலைஞர். காளையார் கோவிலில் படித்துக் கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவரை காதலித்ததாக அவர் அம்மாவிடம் கூறி உள்ளார். அதற்கு அப்பெண் எந்த வித சம்மதமோ, பதிலோ தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


