News September 28, 2024
என்கவுண்டர் விவகாரத்தில் அதிரடி உத்தரவு

மதுரையில் கடந்த 2010 இல் முருகன் (எ) கல்லு மண்டையனை என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கை விசாரிக்க, ஏடிஎஸ்பி-யை விடகூடுதல் தகுதி கொண்ட சிபிசிஐடி அதிகாரியை நியமித்து 6 மாதத்திற்குள் விசாரணை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. என்கவுண்டரில் கொல்லப்பட்ட முருகனின் தாய் குருவம்மாள் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 25, 2025
மதுரை: டிச. 5ல் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி

மதுரையில் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறும் 14வது ஆண்கள் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் சர்வதேச வீரர்களுக்காக, டிசம்பர் 5 அன்று அலங்காநல்லூர் அருகே உள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹாக்கி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும் அரங்கில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
News November 25, 2025
மதுரை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER

மதுரை மக்களே, சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News November 25, 2025
மதுரை: 25 கிலோ சைக்கிளை பற்களால் துாக்கி சாதனை

சிவரக்கோட்டை முன்னாள் ராணுவ வீரர் ஆனந்தகுமார் 45. பள்ளி மாணவ மாணவிகளுக்கு யோகா, சிலம்பாட்டம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை இலவசமாக கற்றுத்தருகிறார். சிறு வயது முதலே பற்களால் சைக்கிளை துாக்கி நின்றவாறு சாகச முயற்சியில் ஈடுபட்டார்.தற்போது 25 கிலோ எடை கொண்ட சைக்கிளை பற்களால் துாக்கியபடி 100 மீட்டர் துாரம் நடந்து சென்று சாதனை படைத்தார். அடுத்து 200 மீட்டர் துாக்கிச் செல்ல திட்டமிட்டுள்ளார்.


