News December 5, 2024
எட்டாம் வகுப்பு முதல் ஐடிஐ வரை படித்தவர்களுக்கு அழைப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சாலை நகரில் வரும் டிசம்பர் 9 அன்று மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இணைந்து நடத்தும் மாபெரும் பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை மேளா நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். இதில் 8,10,12 மற்றும் ஐடிஐ தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள் பங்கேற்கலாம்.
Similar News
News December 1, 2025
திருப்பத்தூர்: 2,147 செவிலியர் பணியிடங்கள்.. நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 1, 2025
திருப்பத்தூர்: விபத்தில் தாய் மகள் இருவரும் பலி!

ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரியை சேர்ந்தவர் வேலாயுதம், பத்மா (65). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இவரது மகள் ரீத்தா என்பவர் தனது மொபட் டில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த நவ.25ம் தேதி அழைத்து சென்றார். அப்போது திரியாலம் பகுதியில் மொபட் தவறி விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் நேற்று (நவ.30) பத்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News December 1, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (டிச.01) காலை வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் காவல் துறை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் உதவி தேவைப்படும் பொழுது இவர்களை தொடர்பு கொள்ளலாம்!


