News September 13, 2024
எடப்பாடி வருகிறார் எதிர்கட்சித் தலைவர்

எடப்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய திட்டப் பணிகளுக்கும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதற்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
பாதுகாப்புடன் பொதுக்கூட்டம்: விஜய் எடுத்த முக்கிய முடிவு!

டிசம்பரில் சேலத்தில் இருந்து விஜய், தனது பரப்புரையை மீண்டும் தொடங்கவுள்ளார். டிச.4-ல் பரப்புரை மேற்கொள்ள போலீஸார்அனுமதி மறுத்த நிலையில் மாற்று தேதியை இறுதி செய்யும் பணியில் தவெக ஈடுபட்டுள்ளது. இதனிடையே, சேலம் சீலநாயக்கன்பட்டியில் 10 ஏக்கர் நிலத்தை பரப்புரைக்கு இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் அசம்பாவிதத்தை அடுத்து, பாதுகாப்புடன் பொதுக்கூட்டம் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
News November 21, 2025
சங்ககிரி: தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி!

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்து மாவட்டம் தும்மபட்டாவை சேர்ந்தவர் புருவன். இவர் குடும்பத்துடன், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வரதம்பட்டியில் வசித்து, அதே பகுதியில் விசைத்தறி தொழில் செய்கிறார். அவரது, 2வது குழந்தை சித்தார்த், நேற்று விளையாடிக்கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 21, 2025
சங்ககிரி: தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி!

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்து மாவட்டம் தும்மபட்டாவை சேர்ந்தவர் புருவன். இவர் குடும்பத்துடன், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வரதம்பட்டியில் வசித்து, அதே பகுதியில் விசைத்தறி தொழில் செய்கிறார். அவரது, 2வது குழந்தை சித்தார்த், நேற்று விளையாடிக்கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


