News December 5, 2024
எச்.பி.ஆரிகவுடர் 131வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

நீலகிரியின் கூட்டுறவு தந்தை என்றழைக்கப்படும் ராவ்பகதூர் எச்.பி.ஆரிகவுடர் 131வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி உதகை ராவ்பகதூர் ஆரிகவுடர் வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு எச்.பி.ஆரிகவுடர் நினைவு விழாக்குழு தலைவரும், படுக தேச பார்ட்டி நிறுவன தலைவருமான மஞ்சை.வி.மோகன் தலைமையில் நடைப்பெற்றது.
Similar News
News November 9, 2025
நீலகிரி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல், இந்த <
News November 9, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கியம் மேம்பாட்டு சங்கம் மூலம், 2024 25 ஆம் ஆண்டுக்கான எஸ்சி எஸ்டி எழுத்தாளர்களின் படைப்புகளை தேர்வு செய்து, தலா ரூ1 லட்சம் நிதி உதவி வழங்கிட ஆணை உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தகுதி உள்ள எஸ்சி, எஸ்டி எழுத்தாளர்கள் tn.gov.in-ல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும் 28ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
News November 9, 2025
நீலகிரி: பீர் பாட்டிலால் பெண்ணை தாக்கிய நபர்!

உதகையில் உள்ள ஒரு கைப்பேசி கடைக்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க நபர், அங்கு வாங்கிய ஹெட்செட் வேலை செய்யவில்லை என்று கூறி மாற்றி தருமாறு கேட்டுள்ளார். அங்கிருந்த பெண், டேமேஜ் ஆகியுள்ளதால் மாற்றி தரமுடியாது என்று கூறவே, அந்த நபர் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு பீர் பாட்டிலை எடுத்து உடைத்து பெண், அப்துல் ஹக்கீம், ரஞ்சித் குமார் ஆகியோரை தாக்கி விட்டு ஓடிவிட்டார். இதை தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்தனர்.


