News April 5, 2025
எங்கள் லேடி ஆஃப் ரான்சம் சர்சின் பெருமைகள்

எங்கள் லேடி ஆஃப் ரான்சம் சர்ச், கிறிஸ்தவர்களின் புனித தளங்களில் ஒன்று ஆகும். இங்கு ஏழு புனித பழங்களைக் குறிக்கும் வகையில், தேவாலயம் ஏழு கதவுகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. வருடம் தோறும் இங்கு வரும் பக்தர்கள் மெழுகு ஏத்தி வேண்டினால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இயேசு பிறந்த டிசம்பர் மாதம் இங்கு மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. ஷேர் பண்ணுங்கள்
Similar News
News April 17, 2025
கன்னியாகுமரி மாவட்ட உதவி எண்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077,ஆட்சியர் அலுவலகம் : 04652 – 279090,279091, காவல் – 100, விபத்து – 108, தீ தடுப்பு – 101, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு -1091 என்ற உதவி எண்களில் அழைக்கலாம்.
News April 17, 2025
குமரி எலக்ட்ரீஷனுக்கு 7 ஆண்டுகள் சிறை

கிள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ராஜேஷ். இவரது உறவினரின் மகள் வீட்டில் தனியாக இருந்த போது அவருக்கு ராஜேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்தப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி சுந்தரய்யா நேற்று ராஜேஷுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
News April 16, 2025
நாகர்கோவிலில் பொன்னப்ப நாடாருக்கு ரூ.50 லட்சத்தில் சிலை

சுதந்திரப் போராட்ட தியாகி கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டத்தில் மார்சல் நேசமணியின் போர்ப்படைத் தளபதியுமாக விளங்கிய பொன்னப்ப நாடாருக்கு நாகர்கோவிலில்ரூ.50 லட்சம் செலவில் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. அவரது நூற்றாண்டைய ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.