News November 22, 2024
ஊரமைப்பு அலுவலகம் புதிய இடமாற்றம்

நாகப்பட்டினம் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பழைய நாகூர் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் புதிய கட்டிடம் கட்டப்பட்டதால் நாகை, வெளிப்பாளையத்தில் இயங்கி வரும் அலுவலகம் 23ம் தேதி முதல் நாகப்பட்டினம் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் புதிதாக கட்டிடத்தில் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
நாகையில் மீன்பிடி துறைமுகம் அடிக்கல் நாட்டு விழா

நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்கன் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில் ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் அமைக்கும்பணியை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட
செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News November 12, 2025
பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த எஸ்பி

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், எஸ்பி செல்வகுமார் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து, 9 மனுக்களை பெற்றார். மேலும் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மனுதாரர்களுக்கு உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
News November 12, 2025
நாகை: CM ஸ்டாலினை விமர்சித்தவருக்கு சிறை

தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை தவறாக விமர்சித்து, வாட்சப் மற்றும் முகநூலில் புரட்சித்தமிழர் மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஆனந்தராஜ் என்பவர் பதிவிட்டுள்ளார். அவர் மீது, திமுக நிர்வாகி கொடுத்த புகாரில் கீழையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தராஜை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள்ளார்.


