News June 27, 2024
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் இன்று செங்கல்பட்டில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது திட்டத்தை செயல்படுத்த போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும், போதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும், உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News September 17, 2025
செங்கை: மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <
News September 17, 2025
கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 17ம் தேதி தாம்பரம் வருவாய் கோட்டத்தில் காலை 10:30 மணிக்கு மதுராந்தகம் வருவாய் கோட்டத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையிலும், செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் தலைமையில் 18ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது என்ன மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.
News September 16, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்-16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.