News January 3, 2025

ஊத்தங்கரை அருகே பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை

image

ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூரில் தீபா என்பவர் கணவர் இறந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், இவர் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் பிரபல இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று  வேலை முடித்து விட்டு வரும் போது மர்மநபர் கத்தியால் குத்தியதில்  அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை.

Similar News

News December 27, 2025

கிருஷ்ணகிரியில் லஞ்சமா ? சட்டுனு இந்த நம்பருக்கு கால்!

image

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-7373001729, DSP-04343- 292275, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090 / 22321085, TOLL FREE NO-1064. யாரேனும் லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்!

News December 27, 2025

ஓசுர் வந்த மத்திய அமைச்சர்!

image

கிருஷ்ணகிரி: மத்திய வேளாண்மை துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ஓசூரில் நடைபெறும் ’நீடித்த நிலைத்த நிரந்தர விவசாயம்’ கருத்தரங்கு கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக தனி விமான மூலம் பெங்களூர் வந்தடைந்தார். அவரை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் நாகராஜ், வரவேற்று மரியாதை செய்தார்.

News December 27, 2025

கிருஷ்ணகிரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!