News January 3, 2025

ஊத்தங்கரை அருகே பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை

image

ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூரில் தீபா என்பவர் கணவர் இறந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், இவர் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் பிரபல இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று  வேலை முடித்து விட்டு வரும் போது மர்மநபர் கத்தியால் குத்தியதில்  அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை.

Similar News

News December 9, 2025

கிருஷ்ணகிரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 13.12.2025 -சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அரசு மகளிர் கலைக்கல்லூரி கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04343-291983 தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

கிருஷ்ணகிரி மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

கிருஷ்ணகிரி பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு<> கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். *தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News December 9, 2025

கிருஷ்ணகிரி: லஞ்சம் கேட்டால் உடனே CALL

image

கிருஷ்ணகிரி மக்களே வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04343- 292275) புகாரளிக்கலாம். இன்று உலக ஊழல் எதிர்ப்பு தினம் என்பதால் தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!