News January 3, 2025

ஊத்தங்கரை அருகே பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை

image

ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூரில் தீபா என்பவர் கணவர் இறந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், இவர் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் பிரபல இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று  வேலை முடித்து விட்டு வரும் போது மர்மநபர் கத்தியால் குத்தியதில்  அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை.

Similar News

News December 19, 2025

கிருஷ்ணகிரி: 12ஆவது படித்திருந்தால் அரசு வேலை!

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., மத்திய அரசின் CBSE துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 12ஆவது படித்தவர்கள் முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.20,000 முதல் 56,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! விண்ணப்பிக்க டிச.22ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. ( SHARE )

News December 19, 2025

கிருஷ்ணகிரியில் 663 பேருக்கு வேலை ரெடி!

image

தமிழகத்தில் ஸ்னைடர் எலெக்ட்ரிக் நிறுவனம் ரூ.718 கோடி முதலீடு செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. சென்னை மற்றும் கோவையில் உள்ள ஆலைகள் விரிவாக்கம் செய்யப்படுவதோடு, ஓசூரில் புதிய ஆலை ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 663 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 19, 2025

கிருஷ்ணகிரி: 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி!

image

கிருஷ்ணகிரி: வெள்ளாளப்பட்டியை சேர்ந்த குமார் என்பவர் தேன்கனிக்கோட்டையில் சாலை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (டிச.18) வேலை முடித்துவிட்டு ஊருக்கு இருசக்கர வாகனத்தில் கல்லாவி ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது, இந்திரா நகர் பேருந்து நிலையம் அருகே இரவு 9 மணி அளவில், எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் அதிவேகமாக வந்து மோதியது. இதில் குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

error: Content is protected !!