News March 29, 2024

ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. மேலும் ஏப்ரல்.19ஆம் தேதி அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

Similar News

News November 16, 2025

புதுவை: ஆன்லைனில் ரூ.6.5 கோடி மோசடி!

image

புதுச்சேரியை சேர்ந்தவர் ஆஷித்குமார், இவரது மொபைலுக்கு வந்த லிங்க்-ஐ பயன்படுத்தி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டார். பல்வேறு தவணைகளில் சுமார் ரூ.6.5 கோடி முதலீடு செய்துள்ளார். இதன்மூலம் அவருக்கு ஆன்லைனில் ரூ.12.47 கோடி இருப்பதாக காட்டியது. ஆனால் அதனை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முடியாமல் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.

News November 16, 2025

புதுச்சேரி: பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பொதுமக்களின் கருத்தை வடிவமைப்பதிலும், தகவலறிந்த சமூகத்தை உருவாக்குவதிலும், நிர்வாகத்தில் பொறுப்புணர்வை நிலைநிறுத்துவதிலும் ஊடகங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. உண்மை, துல்லியம் மற்றும் பாரபட்சமற்ற தன்மை ஆகியவற்றை நிலைநிறுத்துவது ஜனநாயகத்தின் அடித்தளம் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

News November 16, 2025

புதுவை: 2 வயது வரை தாய்ப்பால் அவசியம்!

image

புதுவை, ஜிப்மர் மருத்துவமனை குழந்தைகள் டாக்டர் ஆதிசிவம் விடுத்துள்ள செய்தியில், நவம்பர் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை, தேசிய பச்சிளம் குழந்தைகள் வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு 1000 குழந்தை பிறப்பில் 24.9 பச்சிளம் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இறந்து விடுகின்றன. இதனால் பிறந்த குழந்தைகளுக்கு 2 வயது வரை கண்டிப்பாக தாய்ப்பால் புகட்ட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!