News March 29, 2024
ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. மேலும் ஏப்ரல்.19ஆம் தேதி அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
Similar News
News October 19, 2025
புதுச்சேரிக்கு மழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதுவை மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இன்று(அக்.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது.
News October 19, 2025
புதுவை: வாய்க்காலில் விழுந்து முதியவர் பலி

நிரவியில் வாய்க்காலில் 60 வயது முதியவர் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் அவர், நிரவி காமராஜர் நகர் ராமச்சந்திரன்(60), என்பதும் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 19, 2025
புதுவை: ஜிப்மரில் மாணவர் சேர்க்கை!

புதுவை, ஜிப்மரில் பி.எஸ்சி நர்சிங், ஹெல்த் சயின்ஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நீட் மதிப்பெண் அடிப்படையில் நடக்கிறது. இதற்காக கடந்த செ.22 வரை விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில், தேர்வான மாணவர்கள் தர வரிசை பட்டியலில் 3037 பேர் இடம் பெற்றுள்ளனர். இதன் கலந்தாய்வு வரும் வருகிற அக்.28ம் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வுக்கு பின் மாணவர்கள் பட்டியல் ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்படும்.