News March 29, 2024

ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. மேலும் ஏப்ரல்.19ஆம் தேதி அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

Similar News

News November 15, 2025

புதுச்சேரி: டிகிரி போதும்..பேங்க் வேலை!

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE!

News November 15, 2025

புதுவை: 1.8 கிலோ குட்கா பறிமுதல்-ஒருவர் கைது

image

வீராம்பட்டினம் அருகே பெட்டிக்கடையில், குட்கா மற்றும் சிகரெட்கள் விற்பனை செய்வதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு சென்று, பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். கடையில் 1.8 கிலோ குட்கா மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்து போலீசார் நேற்று வழக்கு பதிந்து, பவானி நகரை சேர்ந்த குமரகுரு, என்பவரை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News November 15, 2025

புதுச்சேரி: ஹைதராபாத் விமானம் ரத்து

image

புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து 78 பயணிகளுடன் ஹைதராபாத் புறப்பட நேற்று விமானம் ஓடுதளத்தில் தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை கேப்டன் மணிஷ் காஜ்பீயி கண்டறிந்தார். இதையடுத்து விமான நிலைய இயக்குநர் ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, இந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் கோளாறு கண்டறியப்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர்.

error: Content is protected !!