News March 29, 2024
ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. ஏப்ரல் 19 அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
Similar News
News September 17, 2025
அரியலூர்: சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

அரியலூர், விக்கிரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தன. அதன் பேரில் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் கடைவீதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் மது விற்பனை செய்த பெருமாள் (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அங்கு விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
News September 17, 2025
அரியலூர்: பதற்றமான பகுதிகளுக்கு குழு அமைப்பு

அரியலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் 29 பதற்றமான பகுதிகளை கண்காணித்திட துணை கலெக்டர் தலைமையில் 5 மண்டல கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல். மேலும், மீட்பு உபகரணங்கள் ஜெனரேட்டர் உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைக்கவும். அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரவும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்
News September 17, 2025
அரியலூர்: ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம், அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குவாகம் காவல் நிலையம் தொடர்பு எண், செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.