News April 26, 2025

ஊட்டி செல்ல கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி

image

கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டி செல்ல கூடுதல் வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கோடை விழாவின் போது தேவை உருவாகும்பட்சத்தில் ஊட்டிக்கு செல்ல கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 20, 2025

குன்னூர் மலை ரயில் ரத்து!

image

குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை உலக பாரம்பரிய முதல் பெற்றது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நாள்தோறும் பெய்தாலும் கனமழையால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரன்னிமேடு ஹில்குரோவ் நிலையங்களுக்கு இடையேயான பகுதியில் தண்டவாளத்தின் மீது மண் சரிந்தது. இதை அகற்றும் பணி இரண்டு நாட்களாக நடைபெற்ற வருவதால் இன்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

News October 20, 2025

தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் தாக்கும் அபாயம்

image

நீலகிரி மாவட்டத்தில், கடந்த நான்கு நாட்களாக, கனமழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் விடிய, விடிய இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், காய்ந்து கிடந்த தேயிலை தோட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மழைக்கு நடுவே, வானம் தொடர்ந்து மேகமூட்டமாக காணப்படுகிறது. போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால், தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

News October 20, 2025

கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கட்டுப்பாட்டு மையத்தில் தொடர்பு கொள்ளும் எண்கள் குறித்த தகவல்களை கேட்டறிந்தார். உடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!