News April 26, 2025
ஊட்டி செல்ல கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி

கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டி செல்ல கூடுதல் வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கோடை விழாவின் போது தேவை உருவாகும்பட்சத்தில் ஊட்டிக்கு செல்ல கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
நீலகிரி: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

நீலகிரி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
News November 27, 2025
நீலகிரி: இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு துணை மின் நிலையத்தில் (1/12/25)-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கட்டபெட்டு துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ஓரசோலை, கக்குச்சி, திருசசிக்கடி,
தும்மனட்டி, இடுஹட்டி, பாக்கியா நகர், நடுஹட்டி, கூக்கல், தூனேரி உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
News November 27, 2025
நீலகிரி மக்களுக்கு முக்கிய தகவல்!

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, வன விலங்குகள் நடமாட்டம், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க வனத்துறை சார்பில் 1800-425-4343 என்ற உதவி எண் பயன்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் வனவிலங்கு தொடர்பான குறைகளை உடனுக்குடன் தெரிவிக்கலாம். SHARE பண்ணுங்க!


