News March 3, 2025

உழவர்களின் கனிவான கவனத்திற்கு

image

தமிழ்நாடு அரசு விவசாயிகள் தங்கள் நில உடைமைகளை சரிபார்க்க பொது சேவை மையத்தில் இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், நில உடமைகளை பதிவு செய்யும் பொருட்டு பொது சேவை மையத்தில் விவசாயிகளின் அடையாள சான்று ஆதார் அட்டை, பட்டா சிட்டா மற்றும் கைபேசி எண் இணைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Similar News

News November 17, 2025

பெரம்பலூர்: இந்த பகுதிகளில் நாளை மின் தடை

image

கிருஷ்ணாபுரம், எசனை மற்றும் சிறுவாச்சூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ.18) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டப்பாடி, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், செஞ்சேரி, ஆலம்பாடி, எசனை, கீழக்கரை, உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9:30 மணி முதல் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 17, 2025

பெரம்பலூரில் மழையா? இதை மறக்காதீங்க!

image

பெரம்பலூர் மக்களே, தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கப்படும்! SHARE

News November 17, 2025

பெரம்பலூர்: இனி வரி செலுத்துவது எளிது!

image

பெரம்பலூர் மக்களே! வீட்டு வரி ரசீது பெறவும் (அ) செலுத்தவும் அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை. தமிழக அரசு புதிதாக, <>https://vptax.tnrd.tn.gov.in<<>> என்ற இணையதளத்தை வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த அறிமுகப்படுத்தி உள்ளது. இனி நீங்கள் சொடுக்கு போடும் நேரத்தில் வரி செலுத்தவும், ரசீது பெறவும் முடியும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!