News March 3, 2025
உழவர்களின் கனிவான கவனத்திற்கு

தமிழ்நாடு அரசு விவசாயிகள் தங்கள் நில உடைமைகளை சரிபார்க்க பொது சேவை மையத்தில் இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், நில உடமைகளை பதிவு செய்யும் பொருட்டு பொது சேவை மையத்தில் விவசாயிகளின் அடையாள சான்று ஆதார் அட்டை, பட்டா சிட்டா மற்றும் கைபேசி எண் இணைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 7, 2026
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட கிராமப் புறங்களில் உயர்தர இணைய சேவை வழங்க ‘பாரத்நெட்’ திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் (DLFP) தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் ஜனவரி 14-க்குள் https://tanfinet.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-24965595 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
News January 7, 2026
பெரம்பலூர்: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு வட்டி மானியத்துடன் கடன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் மின் சந்தையுடன் கூடிய வினியோக தொடர்பு சேவை, சேமிப்பு கிடங்குகள், காளான் – தேனி வளர்ப்பு உள்பட பல்வேறு திட்டங்களுக்கு கடன் பெறலாம். விருப்பமுள்ளவர்கள் <
News January 7, 2026
பெரம்பலூர்: புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அனிதா நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்போவதாக அவர் தெரிவித்தார். புதிய எஸ்பி-க்கு காவல்துறை உயர் அலுவலர்களும், பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். SHARE பண்ணுங்க!


