News August 26, 2024
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்கிறது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வரும் செப்.1ஆம் தேதி முதல் 5% முதல் 7% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, சமயபுரம், மதுரை, எலியார்பத்தி, ஓமலூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உட்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Similar News
News November 28, 2025
24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறை – ஆட்சியர் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை டிட்வா புயல் காரணமாக நவ.29-ம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மழை சேதம் தொடர்பான புகார்களை 1077,04151 -228801 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 28, 2025
கள்ளக்குறிச்சி:நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு டிட்வா புயல் காரணமாக நாளை ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (நவ.29) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று வெளியிட்டயுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட இரவு ரோந்து பணி போலீசரின் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் இரவு ரோந்து பணி போலீசாரின் விவரங்கள் மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ளனர்.அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி போலீசார் இன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதால் தங்கள் பகுதிகளில் உள்ள தங்கள் பிரச்சனை இரவு நேரங்களில் போலீசார் இடம் தெரிவிக்கும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர்


