News August 26, 2024
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்கிறது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வரும் செப்.1ஆம் தேதி முதல் 5% முதல் 7% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, சமயபுரம், மதுரை, எலியார்பத்தி, ஓமலூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உட்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Similar News
News December 9, 2025
கள்ளக்குறிச்சி: கர்ப்பிணி சென்ற வாகனம் விபத்து..

உளுந்தூர்பேட்டை அருகே இறைஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன்யா வயது (32). இவர் தனது மாமனார் சாமிதுரை என்பருடன் வேப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஏழு மாத கர்ப்பிணியான சுகன்யா, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 9, 2025
கள்ளக்குறிச்சியில் ஒரே நாளில் 360 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்பு நேற்று கிராம துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊராட்சி ஊழியர்கள் சார்பில் சம்பள உயர்வு வேண்டியும், பணி நிரந்தரம் வேண்டியும் பொது வேலை நிறுத்தமும் சாலை மறியலும் ஈடுபட்டனர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக 360 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
News December 9, 2025
கள்ளக்குறிச்சி: மனமுடைந்த மதுபிரியர் விபரீத முடிவு!

கள்ளக்குறிச்சி: புத்தந்தூரை சேர்ந்த பெரியசாமி குடிப்பழக்கம் கொண்டவர். இவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததை பார்த்த அவரது உறவினர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பெரியசாமி நேற்று தனது விவசாய நிலத்தில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


