News March 20, 2025
உளுந்தூர்பேட்டையில் விமான ட்ரோன் பூங்கா

உளுந்தூர்பேட்டை அருகே நகர் பகுதியில் அமைந்துள்ள விமான ஓடு பாதையில் விமான பரிசோதனைக் கூடம், விமானப் பயிற்சி நிலையம், ட்ரோன் உற்பத்திப் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசிடம் நிலத்தை வழங்க வலியுறுத்தி விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் அவர்கள் இன்று(மார்.19) மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார்.
Similar News
News March 20, 2025
ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பசுமை தமிழ்நாடு இயக்கத்துடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை ஒருங்கிணைந்த மரக்கன்றுகள், நாற்றங்கால் பண்ணை அமைத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பிரசாந்த் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
News March 20, 2025
கள்ளக்குறிச்சியில் அரசு வேலை ரூ.60,000 வரை சம்பளம்

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துத்துறையின் கீழ், கள்ளிக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வக நுட்புனர், ஆய்வக உதவியாளர், மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு: 18 – 40வயது வரை. மார்ச்.25ஆம் தேதிக்குள் இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஷேர் பண்ணுங்க
News March 20, 2025
மனைவியை கட்டையால் அடித்த கணவர் கைது

சங்கராபுரம் அடுத்த கல்லிப்பட்டை சேர்ந்தவர் முரளி(40). இவரது மனைவி மகாலட்சுமி(36). கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று மகாலட்சுமி, அவரது உறவினருடன் சங்கராபுரம் சென்றார். அங்கு எதிர்பாராவிதமாக முரளியை சந்தித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. கட்டையால் மகாலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் முரளியை கைது செய்தனர்.