News August 27, 2024

உலகளந்த பெருமாள் கோயிலில் நாளை மகா சம்ப்ரோக்ஷணம்

image

உலகளந்த பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் நாளை நடைபெறுகிறது. இன்று காலை, ஹோமம், பூர்ணாஹூதி, வேதப்பரந்த சாற்றுமறையும், மாலை ஹோமும், பூர்ணாஹூதி, வேதப்ரபந்த சாற்றுமறை உள்ளிட்டவை நடக்கிறது. மஹா சம்ப்ரோக்ஷண தினமான நாளை காலை 10:30 – 11:30 மணிக்குள் மஹா சம்ப்ரோக்ஷணம் என அழைக்கப்படும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, வேதபிரபந்த சாற்றுமறையும், மாலை 6:30 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.

Similar News

News August 11, 2025

காஞ்சிபுரத்தில் முதல் மனைவி கொடூர கொலை!

image

வாலாஜாபாத்தை சேர்ந்த மதன் தனது 2ஆவது மனைவி சுகன்யா உடன் வாழ்ந்து வந்தார். அண்மையில், முதல் மனைவி லைலா குமாரி உடன் மீண்டும் பழக்கம் ஏற்பட்டு, அவ்வப்போது சந்தித்து பேசி வந்துள்ளார். இதனால் மதன் – சுகன்யா இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. லைலா குமாரி தன்னை வசியம் செய்ததாக நினைத்து, அவரை வனப்பகுதிக்கு வரவழைத்து கொலை செய்துள்ளார். பின்னர், போலீசார் விசாரணையில் உண்மைகள் வெளிவர, சரணடைந்தார்.

News August 11, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மழை அலர்ட்

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் 16ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆக.11) பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காஞ்சிபுரம் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். மேலும், SHARE பண்ணுங்க.

News August 11, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (10.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!