News October 10, 2024
உறையூரில் வீட்டுக்குள் பிணமாக கிடந்த மூதாட்டி

திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் லலிதா. கணவர் இறந்துவிட்டதால் தனது மகன் பிரபுவுடன் வசித்து வருகிறார். பிரபுவும், அவரது மனைவியும் திருப்பதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு லலிதாவுக்கு பிரபு போன் செய்த போது அவர் எடுக்காததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் போய் பார்த்தபோது லலிதா பிணமாக கிடந்ததுள்ளார். பிரபு அளித்த புகாரின் பேரில் உறையூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 29, 2025
திருச்சி – காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

திருச்சி கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பராமரிப்புப் பணி காரணமாக திருச்சி-காரைக்கால் டெமு (76820) ஏப்ரல் 29, 30, மே 1 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர்-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி-தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். காரைக்கால்-திருச்சி (76819) காரைக்கால்-தஞ்சாவூர் இடையே ரத்து செய்யப்படும்; தஞ்சாவூர்-திருச்சி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 29, 2025
திருச்சியில் வரி செலுத்தினால் ரூ.5000 ஊக்கத்தொகை

திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால், 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5000/- வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். வரி, வரியில்லா இனங்கள் சம்பந்தமான அனைத்து வரிகளை https://tnurbanepay.tn.gov.in என ஆன்லைன் மூலம் செலுத்தலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
சத்துணவு மையங்களில் வேலை: கடைசி வாய்ப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 231 சமையல் உதவியாளர் பணிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <