News August 14, 2024
உறுப்பு தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை

நெல்லிக்குப்பம் பள்ளமேட்டு தெருவை சேர்ந்த ஜோதி என்பவர் உடல் நலக் குறைவால் காலமானார். இந்நிலையில் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலோடு உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்த ஜோதியின் உடலுக்கு கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் அரசு மரியாதை வழங்கப்பட்டது.
Similar News
News September 16, 2025
கடலூர் அருகே பெண் போலீஸ் மீது தாக்குதல்

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஆதிவராகநல்லூரை சேர்ந்தவர் ராஜ்மோகன் மனைவி கவிதா (39). ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் கவிதா நேற்று தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் (36) என்பவர் முன்விரோதம் காரணமாக கவிதாவை அசிங்கமாக திட்டி தாக்கினார். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜகோபாலை கைது செய்தனர்.
News September 16, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.15) இரவு 10 மணி முதல் இன்று (செப்.16) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 15, 2025
கடலூர்: சகலமும் அருளும் கோயில்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தில்லை காளி கோயில் 1229 மற்றும் 1278க்கு இடைப்பட்ட சோழ மன்னர் கோப் பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. காளிதேவி சிவபெருமானிடம் நாட்டிய போட்டியில் தோற்றபிறகு இங்கு சென்றார் என்று புராணக்கதை கூறுகிறது. இக்கோயிலில் அம்மன் 4 முகங்களுடன் காட்சி தருவது சிறப்பாகும். இக்கோயிலில் வழிபட்டால் சகல சௌபாக்கியம் கிடைக்கும், எதிரிகள் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை. இதை SHARE பண்ணுங்க.