News August 14, 2024

உறுப்பு தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை

image

நெல்லிக்குப்பம் பள்ளமேட்டு தெருவை சேர்ந்த ஜோதி என்பவர் உடல் நலக் குறைவால் காலமானார். இந்நிலையில் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலோடு உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்த ஜோதியின் உடலுக்கு கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் அரசு மரியாதை வழங்கப்பட்டது.

Similar News

News December 8, 2025

கடலூர்: ராட்சத முதலையால் மக்கள் அச்சம்

image

கம்மாபுரம் அருகே உள்ள தட்டானோடை கிராமத்தில் ஓடை வாய்க்கால் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று சுமார் 6 அடி நீளம் கொண்ட ராட்சத முதலை ஓடையில் கிடந்துள்ளது. இதனை கண்டு அச்சமடைந்த மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து முதலையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் முதலையை பிடிக்கும் வரை ஓடையில் யாரும் மீன்பிடிக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News December 8, 2025

கடலூர்: இலவச பிளம்பர் பயிற்சி அறிவிப்பு

image

கடலூர் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் கீரப்பாளையம் இந்தியக் கிராமப்புற கல்வி ஏவுதள மையம் இணைந்து நடத்தும் பிளம்பிங் மற்றும் சானிட்டரி பணிகள் பயிற்சி (இலவச குழாய்கள் பொருத்துதல் பயிற்சி) வருகின்ற டிசம்பர் 10-ம் தேதி முதல் கீரப்பாளையம் காமராஜர் தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 9629752271, 9092493827 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News December 8, 2025

கடலூர்: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!