News February 18, 2025
உரிமை பெற்ற பருத்தி விதைகளை பயிரிட வலியுறுத்தல்

திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் பருத்தியில் எம்சியூ 5 உள்ளிட்ட ரகங்களும் தனியார் வீரிய ஒட்டு ரக பருத்தி விதைகளும் விற்பனை செய்யப்படுகின்றன .இந்த வகை பருத்தி விதைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 475 கிராம் பொட்டலம் ரூ.864 விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.
Similar News
News January 6, 2026
நெல்லை: ரூ.5 லட்சம் இலவச இன்சூரன்ஸ்! APPLY பண்ணுங்க

திருநெல்வேலி மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார், வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!
News January 6, 2026
நெல்லை: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

திருநெல்வேலி மக்களே, பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 6, 2026
நெல்லையில் ஒருவர் அடித்துக் கொலை

நெல்லை சீவலப்பேரியை அடுத்த தோனி துறை பகுதியில் மார்ட்டின் என்பவர் இன்று அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சுடுகாட்டுப் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட பிரச்சனையில் மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்த மார்ட்டின் தூத்துக்குடி மாவட்டம் முதலூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிகிறது. சீவலப்பேரி போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


