News August 17, 2024

உரிமை தொகை வதந்தி: அதிகாரிகள் மறுப்பு

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மற்றும் 19 , 20 ஆகிய தேதிகளில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்படும் எனவும் இதில் மனு அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் இது தவறான தகவல் என துறை அதிகாரிகள் நேற்று மறுப்பு தெரிவித்துள்ளனர். * அனைவருக்கும் பகிர்ந்து தெரியபடுத்துங்கள்*

Similar News

News November 23, 2025

தூத்துக்குடி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தூத்துக்குடி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 23, 2025

திருச்செந்தூர்: ஐயப்ப பக்தர்களுக்கு.. போலீஸ் அறிவிப்பு!

image

திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் தங்களது வாகனங்களை சாலை ஓரங்களில் அங்கும் இங்கும் நிறுத்தாமல், போக்குவரத்துக்கும், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படா வண்ணம் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. தொடர் மழை காரணாமாக தற்காலிக நிறுத்துமிடங்கள் (Parking) பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

News November 22, 2025

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!