News April 15, 2024

உரம் கலந்த கண்ணீரை குடித்த 13 ஆடுகள் பலி

image

கள்ளக்குறிச்சி வானாபுரம் அடுத்து ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்பவர் நேற்று தனது 13 ஆடுகளை
ஏந்தல் பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது அங்கு, விளைநிலத்தில் இருந்த தொட்டியில் ஆடுகள் தண்ணீர் குடித்தன. சிறிது நேரத்தில் 13 ஆடுகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சுருண்டு விழுந்து இறந்தன. போலீஸ் விசாரனையில் தொட்டி தண்ணீரில் உரம் கலந்திருப்பது தெரியவந்தது.

Similar News

News December 24, 2025

கள்ளக்குறிச்சி: ஆசையாய் வாங்கியதை பறிகொடுத்த பெண்!

image

மாதவச்சேரியைச் சேர்ந்த கவிதா (38), கள்ளக்குறிச்சியில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஆசை ஆசையாய், ரூ.20,000-க்கு வெள்ளி கொலுசு வாங்கியுள்ளார். பின்னர் அந்த கொலுசையும், ரூ.5000 பணத்தையும் பர்சில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பியுள்ளார். திடீரென்று பார்த்தபோது மணிபர்ஸை காணவில்லை. பின்னர், கவிதாவை நோட்டமிட்ட மர்மநபர், அதை திருடியது தெரியவந்தது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 24, 2025

கள்ளக்குறிச்சி: ஆசைவார்த்தை கூறி உல்லாசம்!

image

கள்ளக்குறிச்சி: புதுக்கேணியைச் சேர்ந்த குமரேசன் (25) ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். அங்கு கணவரை இழந்த 27 வயது பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர் திருமணம் செய்துகொள்வதாக கூறி அப்பெண்ணிடம் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் திருமணம் பற்றி கேட்ட நிலையில், மறுத்ததுடன் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்த வழக்கில் அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 23, 2025

கள்ளக்குறிச்சி: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!