News April 15, 2024

உரம் கலந்த கண்ணீரை குடித்த 13 ஆடுகள் பலி

image

கள்ளக்குறிச்சி வானாபுரம் அடுத்து ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்பவர் நேற்று தனது 13 ஆடுகளை
ஏந்தல் பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது அங்கு, விளைநிலத்தில் இருந்த தொட்டியில் ஆடுகள் தண்ணீர் குடித்தன. சிறிது நேரத்தில் 13 ஆடுகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சுருண்டு விழுந்து இறந்தன. போலீஸ் விசாரனையில் தொட்டி தண்ணீரில் உரம் கலந்திருப்பது தெரியவந்தது.

Similar News

News November 28, 2025

கள்ளக்குறிச்சி:SIR படிவங்களை சமர்ப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய காலம் குறைவாக உள்ளது. உடனடியாக படிவங்களை அளிக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது கடினமாகிவிடும்,எனவே இந்த அவசரத்தை உணர்ந்து விரைந்து செயல்பட வேண்டுமென்றும் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 4-ம் தேதி கடைசி தேதி என்றும் ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ.28) அறிவித்துள்ளார்.

News November 28, 2025

கள்ளக்குறிச்சி மாணவி சாதனை.. குவியும் பாராட்டு!

image

கள்ளக்குறிச்சி: கரூரில், மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில், பங்கேற்ற வேளாகுறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி செல்வி ஜி. கவிதா, ஏழாம் வகுப்பு கவிதை போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று அசத்தியுள்ளார். அவருக்கு இன்று (நவ.28) கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

News November 28, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை!

image

கள்ளக்குறிச்சி மக்களே, India Post Payments Bank-ல் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 – 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி டிச.01 ஆகும். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!