News April 15, 2024

உரம் கலந்த கண்ணீரை குடித்த 13 ஆடுகள் பலி

image

கள்ளக்குறிச்சி வானாபுரம் அடுத்து ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்பவர் நேற்று தனது 13 ஆடுகளை
ஏந்தல் பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது அங்கு, விளைநிலத்தில் இருந்த தொட்டியில் ஆடுகள் தண்ணீர் குடித்தன. சிறிது நேரத்தில் 13 ஆடுகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சுருண்டு விழுந்து இறந்தன. போலீஸ் விசாரனையில் தொட்டி தண்ணீரில் உரம் கலந்திருப்பது தெரியவந்தது.

Similar News

News October 31, 2025

கள்ளக்குறிச்சி: இழந்த செல்வதை மீட்டு தரும் பெருமாள்!

image

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் தாலுக்காவிலுள்ள திருவரங்கத்தில் அமைந்துள்ளது ஆதி திருவரங்கம் கோயில். இந்த கோயில் 11ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. இந்த கோயிலில் ரங்கநாத சாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும், இங்கு சனிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தால் திருமணம் வரம், குழந்தை வரம் மற்றும் இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைக்கும் என்பது ஐதீகம்.ஷேர் பண்ணுங்க

News October 31, 2025

கள்ளக்குறிச்சி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால் கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்

News October 31, 2025

கள்ளக்குறிச்சி: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!