News August 7, 2024
உயிர் காக்கும் காவலர்களுக்கு பணி நியமன ஆணை

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், நீச்சல் மற்றும் மீட்புப்பணிகளில் பயிற்சி பெற்ற 39 உயிர் காக்கும் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில், முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி இந்த 39 உயிர் காக்கும் காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
Similar News
News September 16, 2025
புதுச்சேரி பெண்களுக்கு இலவச மருத்துவ முகாம்

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சுகாதாரத்துறை மூலம் வருகின்ற 17/09/2025 அன்று புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் ‘ஆரோக்கியமான பெண்களே குடும்பத்தின் பலம்’ என்ற திட்டத்தினை மத்திய சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரி அரசு தொடங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் துவக்க விழாவில் முதல்வர் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News September 16, 2025
புதுச்சேரி: ரூ.35,000 சம்பளம், தவறவிடாதீர்கள்!

புதுச்சேரி: படித்த இளைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை பார்க்க ஆசை இருந்தால் இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்.
⏩பிரிவு: மத்திய அரசு வேலை
⏩துறை: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
⏩பணி: Station Controller
⏩காலியிடங்கள்: 368
⏩சம்பளம்: ரூ.35,400
⏩வயது வரம்பு: 20 முதல் 33 வரை
⏩கல்வி தகுதி:Any Degree
⏩ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
⏩கடைசி தேதி: 14.10.2025
பயனுள்ள இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News September 16, 2025
புதுவையில் ஒரே நேரத்தில் 9 பைக்குகள் நாசம்

புதுவை உருளையன்பேட்டை வேல்முருகன், டிப்பர் லாரி டிரைவர். இவர், நேற்று புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி லாரியை ஓட்டி வந்தார். மொரட்டாண்டி பகுதியை கடந்து சாலையோரம் டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு, ஆப் செய்யாமல்
கீழே இறங்கி தண்ணீர் பிடிக்க சென்றபோது லாரி நகர்ந்து ஓடி அப்பகுதியில் சாலையோரம் நிறுத்தியிருந்த 9 பைக்குகள் மீது மோதி சேதப்படுத்தியது. இது குறித்து ஆரோவில் போலீசார் விசாரித்தனர்.