News August 7, 2024

உயிர் காக்கும் காவலர்களுக்கு பணி நியமன ஆணை

image

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், நீச்சல் மற்றும் மீட்புப்பணிகளில் பயிற்சி பெற்ற 39 உயிர் காக்கும் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில், முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி இந்த 39 உயிர் காக்கும் காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Similar News

News November 11, 2025

புதுச்சேரி: பள்ளி மாணவர்களுக்கு ஷூக்கள் வழங்க முடிவு

image

புதுச்சேரி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், புத்தக பை, மதிய உணவு உள்ளிட்டவை வழங்குகிறது. இந்தநிலையில் நடப்பாண்டில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ‘ஷூக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஷூக்களை வருகிற 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

News November 11, 2025

புதுச்சேரி: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<> eportal.incometax.gov.in<<>> என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News November 11, 2025

புதுவை: கண்களை தானமாக வழங்கிய குடும்பம்

image

புதுவை, வெங்கட்டா நகரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (98). இவர், வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது கண்களை தானம் செய்திட, அவரது குடும்பத்தினர் முன்வந்து, அது குறித்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுவை கிளை சேர்மனை தொடர்பு கொண்டுள்ளனர். அவர், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அங்கு வந்த கண் மருத்துவ குழுவினர் ஜெயலட்சுமி கண்களை தானமாக பெற்றுச் சென்றனர்.

error: Content is protected !!