News January 23, 2025
உயர் கல்வி மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம்

தஞ்சையில் நாளை (ஜன.24) பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில், மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாமை மாவட்ட நிர்வாகமும், அனைத்து வங்கிகளும் இணைந்து பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தவுள்ளன. உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News November 14, 2025
தஞ்சாவூர்: B.E போதும்.. இஸ்ரோவில் வேலை ரெடி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: இன்று (14.11.2025)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
தஞ்சாவூர்: ஆற்றில் குதித்து பட்டதாரி தற்கொலை!

ஒரத்தநாடு வட்டம் காசாநாடு புதூர் பல்லாக்குத் தெருவை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி முகேஷ் (29). இவர் கடந்த 11ம் தேதி வீட்டிலிருந்து வெளியேறியவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சினம்பூண்டி 3 குமுளி பகுதியில் அவரது பைக் இருந்ததை தொடர்ந்து தீயணைப்பு படையினர் காவிரியில் இறங்கி தேடிய பொழுது நேற்று இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
News November 14, 2025
தஞ்சையில் 2.54 லட்சம் டன் நெல் கொள்முதல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் புதன்கிழமை வரை 2.54 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது 118 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. மாவட்டத்தில் மொத்தம் 1.82 லட்சம் டன் நெல் இருப்பும், 76 ஆயிரத்து 389 டன் அரிசி இருப்பும் உள்ளன. மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு 1.66 லட்சம் டன் நெல் சரக்கு ரயில் மற்றும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.


