News January 23, 2025
உயர் கல்வி மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம்

தஞ்சையில் நாளை (ஜன.24) பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில், மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாமை மாவட்ட நிர்வாகமும், அனைத்து வங்கிகளும் இணைந்து பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தவுள்ளன. உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News November 22, 2025
தஞ்சாவூர்: மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே மேலமாஞ்சேரியைச் சேர்ந்த 83 வயதான லோகாம்பாள், தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அவர் மரக்கிளையை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின் கம்பியைப் பிடித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கபிஸ்தலம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 22, 2025
தஞ்சாவூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

தஞ்சாவூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
News November 22, 2025
தஞ்சாவூர் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்காளர் உதவி மையங்கள் இன்று (நவ.22) செயல்படுகின்றன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கீட்டு படிவத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கு இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை உதவி மையங்கள் செயல்படுமென மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


