News May 16, 2024
உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்

திருவாரூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் 15/5/24 அன்று திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி தலைமை வகித்தார். திட்ட அலுவலர் பிரபாகரன் மற்றும் மாவட்ட கருத்தாளர்கள் பயிற்சி அளித்தனர்.
Similar News
News September 18, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.18) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 18, 2025
திருவாரூர்: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

திருவாரூர் மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
✅துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
✅பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
✅கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
✅சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 30.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..
News September 18, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். இதில் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் கடைகள் தொண்டு நிறுவனங்கள் என அனைத்திலும் பெண்களுக்கு பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் உடனடியாக உள்ளகக் குழு அமைக்க வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களை உடன் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.