News December 31, 2024

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000

image

ஈரோடு மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தில்மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டையை வழங்கினார்.

Similar News

News November 7, 2025

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் நீக்கம்

image

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 14 பேரை இபிஎஸ் கட்சியை விட்டு நீக்கியுள்ளார். அதில், EX.எம்.பி. சத்தியபாமா, ஒன்றிய செயலாளர்கள் தம்பி (எ) சுப்பிரமணியம் (நம்பியூர்), குறிஞ்சிநாதன் (கோபி மேற்கு ஒன்றியம்) ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், முன்னாள் யூனியன் சேர்மன்கள் மவுதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, எஸ்.எஸ்.ரமேஸ் உள்ளிட்ட 14 பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.

News November 7, 2025

பவானி: பட்டப்பகலில் துணிகரம்.. தட்டி தூக்கிய போலீஸ்

image

பவானியில் பட்டப் பகலில் பைனான்ஸில் பூட்டை உடைத்து ரூ.55,000 ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதாக பைனான்ஸ் உரிமையாளர் விவேகானந்தன் போலீசாரிடம் புகார் அளித்தார். அப்புகாரின் படி, ஈரோடு மாவட்டம் கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் குப்பிபாலம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர்களை கைது செய்து, ரூ.55,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.

News November 7, 2025

டெட் தேர்வுக்கு முன் மாதிரி தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு

image

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடத்தப்படும் டெட் தேர்வுக்கு மண்டல அளவில் முன்மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. நாளை மறுநாள் எட்டாம் தேதி ஈரோடு வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டு மையத்தில் நடைபெறும் இந்த முன்மாதிரி தேர்வுக்கு கொடுக்கப்பட்டுள்ள https://forms.gle/ovgkrtpSSQbAeP6L7 லிங்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்டம் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!