News December 31, 2024

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000

image

ஈரோடு மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தில்மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டையை வழங்கினார்.

Similar News

News November 22, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

கார் ஓட்டும்போது மொபைலில் மெசேஜ் அனுப்புவது கவனச்சிதறலை ஏற்படுத்தி பெரும் விபத்துகளுக்கு காரணமாகும், என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. வாகனம் ஓட்டும் போது மொபைலை பயன்படுத்தக் கூடாது; அவசரமாக இருந்தால், வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி பின்னர் பயன்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் ஃபோனை அணுக முடியாத இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News November 22, 2025

சிவகிரியில் பட்டப்பகலில் கொள்ளையர்கள்!

image

சிவகிரி அருகே குலவிளக்கு ஊராட்சிக்குட்பட்ட பூசாரிபாளையத்தை சேர்ந்த ராவுத்தகுமார் (39), தோட்டத்திற்கு புறப்பட்டபோது சந்தேகமான 2 பேர் வீட்டை நோக்கி நின்று இருந்தனர். திரும்பி வந்த போது, அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்து திருட முயன்றனர். ராவுத்தகுமார் சத்தமிட்டதால், மர்ம நபர்கள் அவரை தள்ளி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

News November 22, 2025

ஜெருசலேம் புனிதபயணத்துக்கு மானியம்

image

நவ.1 பிறகு ஜெருசலேம் புனிதபயணம் சென்று திரும்பிய 550 கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ.37,000, 50 கன்னியாஸ்திரிகள்/ அருட்சகோதரிகளுக்கு தலா ரூ.60,000 மானியமாக வழங்கப்பட உள்ளதால், தகுதியானவர்கள் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம். 28-2-26க்குள் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, சென்னை-க்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.

error: Content is protected !!