News August 15, 2024

உத்தப்புரத்தில் மதுரை SP ஆய்வு

image

மதுரை உத்தப்புரத்தில் முத்தாலம்மன், மாரியம்மன் கோயில் வழிபடுவதில் இரு சமூகத்தினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 10 ஆண்டுக்கு முன் மூடப்பட்ட கோயில், மதுரை ஐகோர்ட் உத்தரவுப்படி திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. இக்கோயில் பகுதியில் நேற்று(ஆக.,14) ஆய்வு செயத SP அரவிந்த், அனைத்து தரப்பு மக்களும் வழிபடுவதில் பிரச்னை இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு டிஎஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News December 4, 2025

BREAKING திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

image

திருப்பரங்குன்றம் வழக்கில், மதுரை காவல் ஆணையர் ஆஜராகி விளக்கமளித்த நிலையில், மனுதாரர் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். தீபம் ஏற்றும் மனுதாரர் தரப்புக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் காவல் ஆணையர் லோகநாதனுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளளார். திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவையும் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

News December 4, 2025

JUST IN மதுரை காவல் ஆணையர் ஆஜரானார்..

image

திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரை 5:30 மணிக்குள் ஆஜராக கூறி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்த நிலையில், மதுரை காவல் ஆணையர் லோகநாதன் காணொளி காட்சி மூலம் ஆஜரானார். நீதிபதி எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு காவல் ஆணையர் லோகநாதன் பதிலளித்து வருகிறார்.

News December 4, 2025

BREAKING மதுரை ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவு.!

image

திருப்பரங்குன்றம் வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் 5:30 மணிக்குள் ஆஜராகவிலையென்றால் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்துளளார். சீருடையில் இல்லையென்றாலும் பரவாயில்லை உடனடியாக ஆஜராக கூறியுள்ளார். 5 நிமிடத்தில் எப்படி ஆஜராக முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

error: Content is protected !!