News August 10, 2024
உதயநிதி துணை முதல்வரானால் இதுதான் நடக்கும்

உதயநிதிக்கு துணை முதலமைச்சராக சுபமுகூர்த்தம் குறித்து விட்டதாக தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். உதயநிதி துணை முதலமைச்சராக ஆகிய பின் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடாது, கள்ளச்சாராய ஆறு தான் ஓடும் என கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மதுரையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், திமுக ஆட்சி சாதிக்கவில்லை என்றும் சறுக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 5, 2026
மதுரை: 25 வயது இளைஞர் மீது போக்சோ

மதுரை நெல்பேட்டையை சேர்ந்தவர் சீனிசகுபர் மகன் சேக்முஜாகிதீன்(25). இவர் கல்லூரி மாணவி ஒருவரை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்துள்ளார். அந்த மாணவி வீட்டிற்கு அதிகாலை சென்று கதவைத் தட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் சேக்முஜாகிதீனை போக்சோ சட்டத்தில் இன்று கைது செய்தனர்.
News January 5, 2026
மதுரை: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை; இன்றே கடைசி APPLY

மதுரை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News January 5, 2026
மதுரை: மன அழுத்தத்தில் ஆசிட் குடித்து தற்கொலை.!

மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(45). இவர் தங்க நகை செய்யும் தொழில் செய்து வந்தார். சில ஆண்டுகளாக லேசான மன அழுத்தத்தில் இருந்தவர் அதற்கு சிகிச்சை பெற்றும் தூக்க மாத்திரை போட்டு வந்தார். சில நாட்களாக தூக்கம் வரவில்லை என இரவு முழுவதும் நடந்தபடி இருந்து வந்தார். இதனால் மன அழுத்தத்தில் நேற்று பாத்ரூம் கழுவும் ஆசிட் குடித்து உயிரிழந்தார். இது குறித்து S.S காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.


