News September 13, 2024
உதயநிதியை துணை முதல்வராக்குவதில் தவறில்லை

உதயநிதியை துணை முதல்வராக்குவதில் எந்த தவறுமில்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று(செப்.12) செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் வாக்களித்து தி.மு.க-வை ஆட்சியில் அமர வைத்துள்ளனர், அதனால் உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவதில் எந்த தவறுமில்லை மேலும், மது விற்பனை இல்லையென்றால் ஆட்சியை நடத்த முடியாது என தி.மு.க – அ.தி.மு.க நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News December 6, 2025
மதுரை புதிய பாலத்திற்கு பெயர் தெரியுமா..?

மதுரை மாவட்டத்தில் ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேலமடை சந்திப்பு புதிய மேம்பாலத்தை நாளை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.950 மீட்டர் நீளமுள்ள இந்த மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என தற்போது முதல்வர் அறிவித்துள்ளார். இந்த பாலம் மூலம் மதுரை தொண்டி சாலை, கோரிப்பாளையம் முதல் சுற்றுச் சாலை வரை போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும்
News December 6, 2025
மதுரை: B.E முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

மதுரை மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, PG படித்தவர்கள் டிச 29க்குள் இங்கு <
News December 6, 2025
மதுரை: குழந்தையை கொன்று புதரில் வீசிய கொடூரம்

மதுரை மாவட்டம் சொரிக்காம்பட்டியில் கண்ணன் 22, கேரளாவை சேர்ந்த கலாசூர்யா 26, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கண்ணன் கலாசூர்யாவுக்கு மூன்றாவது கணவர். இரண்டாவது கணவருக்கு பிறந்த கலாசூர்யாவின் 2 வயது குழந்தை தனக்கு தொந்தரவாக இருப்பதாக கூறிய கண்ணன் கடந்த மாதம் 5-ந் தேதி குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று, கலாசூர்யாவுடன் சேர்ந்து காட்டுப்பகுதியில் புதரில் வீசியுள்ளார். செக்கானூரணி போலீசார் விசாரணை.


