News January 24, 2025
உதகை முதல் கொள்ளேகால் கர்நாடகா பேருந்து சேவை

உதகை பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லேகல் பகுதிக்குமீண்டும் கர்நாடக மாநில பேருந்து. இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த இந்த பேருந்து மீண்டும் பயணிகள் வசதிக்காக ஆரம்பிக்கப்படுகிறது. இதனால் சாம்ராஜ்நகர் செல்வதற்கு ஒரே பேருந்தில் செல்லலாம். அங்கிருந்து சத்தியமங்கலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
நீலகிரி: 4 மாதங்களில் 100 கட்டடங்களுக்கு ‘சீல்’ வைப்பு

நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில் வருவாய், நகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். விதிமீறிய கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, படிப்படியாக ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 மாதங்களில் 100க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
நீலகிரிக்கு 2 நாட்கள் எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோரும், பள்ளி – கல்லூரி மாணவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதகாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்களே வெளியில் செல்லும்போது குடையுடன் போங்க. இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 8, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவி தொகை பெற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உதவி தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை https://scholarships.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2025-26 ஆண்டிற்கான தேசிய கல்வி உதவி தொகை விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் நீலகிரியை சார்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


