News August 15, 2024

உதகை மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றம்

image

உதகை அரசு கல்லூரி மைதானத்தில் சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது .  மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு  தேசிய கொடி ஏற்றி வைத்து காவலர் அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 15 பயனாளிகளுக்கு ரூ.25.56 இலட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா , கூடுதல் ஆட்சியர் கௌஷிக் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Similar News

News November 17, 2025

கோத்தகிரி அருகே அரசு பேருந்து விபத்து!

image

கோத்தகிரியில் இருந்து நெடுகுளா செல்லும் சாலையில் ராஜ்நகர் பகுதியில் வெட்டப்பட்ட மரத்துண்டுகளை கிரேன் மூலம் லாரியில் ஏற்றும் பணி நடந்தது. அப்போது அந்த வழியாக அரசு பஸ் சுண்டட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கிரேன் ஆபரேட்டரின் கவனக்குறைவால் எதிர்பாராதவிதமாக கிரேனின் இரும்பு கொக்கி அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

News November 17, 2025

குன்னூர் பகுதியில் தடை அறிவிப்பு

image

குன்னூர் அருகே  லேம்ஸ்ராக்  மற்றும் டால்பின் நோஸ் ஆகிய சுற்றுலா  காட்சி முனை இடங்களுக்கு செல்லும் சாலையில் காங்கிரீட் சாலை பணிகள் நடைப்பெறுகிறது. அதனால்   சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர்  வாகனங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை  போக்குவரத்து  தடைவிதிக்கப்பட்டுள்ளது . அதையும்  மீறி செல்லும்  வாகனங்கள்  CMS  பகுதியிலேயே திருப்பி அனுப்பப்படும்.  இந்த சாலை பணி ஒரு வாரத்திற்கு  நடைபெறுகிறது.

News November 17, 2025

நீலகிரி: வாக்காளர் சிறப்பு முகாம் ஆய்வு

image

நீலகிரி மாவட்டம், பாலகொலா ஊராட்சி தங்காடு கிராமத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த (SIR) முகாமை இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்முகாமில் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை வாக்குபதிவு அலுவலர், கோட்டாட்சியர், உதவி வாக்குபதிவு அலுவலர் மற்றும் வட்டாட்சியர் உடன் சேர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டனர்.

error: Content is protected !!