News August 15, 2024
உதகை மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றம்

உதகை அரசு கல்லூரி மைதானத்தில் சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது . மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தேசிய கொடி ஏற்றி வைத்து காவலர் அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 15 பயனாளிகளுக்கு ரூ.25.56 இலட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா , கூடுதல் ஆட்சியர் கௌஷிக் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
Similar News
News November 21, 2025
நீலகிரி: ஆதார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே https://uidai.gov.in/ என்ற இணையதளத்தில் மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News November 21, 2025
நீலகிரி: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News November 21, 2025
நீலகிரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1. முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!


