News August 14, 2024
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள உணவு கடை, ஜூஸ் கடை மற்றும் பேக்கரி கடைகளில், ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இன்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற முறையில் இருந்த சுமார் 20 கிலோ எடையுள்ள தின்பண்டங்கள் பறிமுதல் செய்தனர். மேலும் 4 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
Similar News
News December 22, 2025
ஈரோட்டில் குறைந்த விலையில் பைக் வாங்க ஆசையா?

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 145 வாகனங்கள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு ஆனைக்கல்பாளையத்தில் ஏலம் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ளது. வாகனங்களை வாங்க விருப்பமுள்ளவர்கள் 22,23ம் தேதி நேரில் பார்க்கலாம் முன் பணம் செலுத்துப்பவர்கள் ஏலத்தில் இருக்க முடியும்,மேலும் விவரங்களுக்கு ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
News December 22, 2025
ஈரோட்டில் களம் இறங்கும் அடுத்த அரசியல் வாரிசு!

மறைந்த EX மத்திய அமைச்சரும், EX தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான EVKS இளங்கோவனின் பேத்தியும், EX MLA திருமகன் ஈவெரா மகளுமான சமண்ணா ஈவெரா. EVKS இளங்கோவனின் பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை டெல்லியில் நேற்று சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
News December 22, 2025
ஈரோடு அருகே பெண் துடிதுடித்து உயிரிழப்பு!

ஈரோடு பொம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி ரம்யா, நேற்று(டிச.21) புதிதாகக் கட்டி வரும் வீட்டிற்குள் கதவைத் தாழிட்டுத் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் இருந்தால், தமிழக அரசின் உதவி மையமான 104 தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம்.


